Monday, April 16, 2012

அமரன்

நடு இரவில் 
தூக்கப் பட்டு 
கண்ணாடிக் கூண்டுக்குள் அடைக்கப் பட்டேன் 
முகமூடிகள் மாட்டப் பட்டன 
எலும்புக் கரங்களில் 
நரம்புகளை நெருடி நெருடி 
ஊசிகள் ஏற்றப் பட்டன 
வினோத நிறங்கள் பொலியும் 
திரவங்கள் 
உடலை ஊடுருவின 
இருபத்தி நாலுமணி 
என்று கடிகாரத்தில் 
எல்லைகள் குறிக்கப் பட்டன 
நல்ல வேளையாக
நான் நிரந்தரமானவன் 
என்ற புகழ் பெற்ற 
கவிதையை எழுதிய 
கவி நான்தான் 
என்று 
சுற்றி நின்றிருந்த யாருக்கும் தெரியவில்லை 
என்ற ஆறுதலோடு 
இறந்து போனேன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails