Monday, October 3, 2011

உயிர்த்தெழல்


1.திரும்பவும்
ஏசு பிறக்க
திரும்பவும் காட்டிக் கொடுக்க
யூதாசுக்கு
திரும்பவும்
முப்பது வெள்ளிக் காசுகள்
கொடுக்கப் பட்டது
அவன் அதை வீசி எறிந்துவிட்டு
''ஆட்டோ காசுக்குக் கூட போதாது
விலைவாசி ரொம்ப ஏறிவிட்டது
ஏசுவின விலையும்...''என்றான்
''தவிரவும் அவர் இப்போது
உலகின் மிகப்பெரிய
பணக்காரர்... ''


2.குகைக்குள்
தனிமையாயிருக்கிறது
என்று
உயிர்த்தெழுந்து வந்தவர்
வாசலில்
நெருக்கிக் கொண்டிருந்த
டிவிக் காரர்களைக் கண்டு
இங்கு ரொம்ப கூட்டமாக இருக்கிறது
என்று கூறி
திரும்ப மரித்துப் போனார்



3.விலாத் தழும்பைக் காட்டி
இப்போது நம்புகிறாயா
என்றவர் முன்
தலைகுப்புற விழுந்து
சந்தேகத் தோமா
''மெய்யாகவே
உங்களது பிளாஸ்டிக் சர்ஜன்
தேவகிருபை பெற்றவர் ''
என்றார்


4.அங்கியல்ல
வானத்திலிருந்து ஒலித்த
பிதாவின் குரல்
சந்தேகத்துக்கு இடமின்றி
ஸ்கர்ட் தான் அணிந்திருந்தது !

ஏறெடுத்து பார்த்தவனை
''அந்தக் கோணத்தில் இருந்து
பார்க்காதே இழவெடுத்தவனே''
என்று அதட்டியது

4 comments:

LinkWithin

Related Posts with Thumbnails