Friday, July 30, 2010

மீள்வாசிப்பு

இன்னும் எனக்குள்
காதல் உண்டோ
என்ற சந்தேகத்தை
பரிசோதிக்கும்
முயற்சியாய்தான்
அவளைக்
காதலிக்க ஆரம்பித்தேன்..
முதல் காதலின்
அத்தனை தீவிரத்துடனும்
பதைபதைத்து 
உருகுவதை
நானே
அச்சத்துடன் நோக்கினேன்.

முதல் அறிதலின்  பிறகு
எப்போதுமே
விரல்களின் நினைவில்
வீணை இருக்கிறது
என்றான் தோழன்

1 comment:

  1. true true

    நாக்கை சுட்டுக்கொண்ட பூனை போல இல்லாமல் ,
    வீணை கண்ட விரல்களாய் ..
    சபாஷ்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails