Monday, July 19, 2010

குற்றம்

வெளியில்
சென்றிருந்த நாய்
வீடு
திரும்பி
குட்டிகளைக் காணாது
தவித்தது.
ஊரெல்லாம்
தேடி அலைந்தது
ஊளையிட்டு அழுதது.
படி இறங்கவிடாமல்
என்னிடம்
வாலாட்டி முறையிட்டது.

தூக்கம்
தொலைகிறது என்று
நான்தான்
துணியில் சுற்றி
தூரதேசத்தில்
தொலைத்துவிட்டு வந்தேன்
என்பதை
அதற்கு
சொல்லவில்லை...

2 comments:

  1. நாய் பாவம் உங்களை சும்மா விடாது.

    ReplyDelete
  2. கொடுமைக்காரர் நீங்கள் !

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails