Saturday, July 3, 2010

இறப்பென்பது மரணம் அல்ல

கனவில் கண்ட
பறவையாய்
காலம்
பறந்து போயிற்று
கூடவே
படிக்க,பாட நடிக்க,எழுத
உதவ,உடுத்த
காதலிக்க,காமம் செய்ய
என்று எல்லா கனவுகளும்..

நான்
வானவில்லுக்காக
ஏங்கிக் கொண்டிருக்கையில்
கூடவே வந்த
பட்டாம்பூச்சி
ரயில் சக்கரங்களில்
சிக்கி
கிழிந்துபோனது

புறமுதுகு இருட்டில்
காத்திருக்கும்
சர்ப்பமாய் காலம்
எப்போதோ
நிகழ்ந்த
மரணத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள
காத்திருக்கிறது

இறப்பென்பது
மரணம் மட்டும் அல்ல

1 comment:

  1. பட்டாம்பூச்சி வரி தாக்குகிறது. நல்ல இறுக்கம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails