Thursday, July 29, 2010

உடல் தத்துவம் 3

எச்சரிக்கை! வயது வந்தவர்க்கு மட்டும்!






என் மனம் ஒருகணம் அதன் எல்லா ஓசைகளையும் நிறுத்தி மீண்டது.வேங்கையைக் கண்டதும் காட்டில் சட்டென்று ஒரு அமைதி சூழும்.கான் உலாவிகளுக்கு மட்டுமே அந்த திடீர் நிசப்தத்தின் அபாயம் புரியும்.அமைதியான காடு என்பதே கிடையாது.காடு ஒருவகையில் நம் மனதினைப் போல..எப்போதும் ஏதோ ஓசை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
நாய்கள் அந்தப் பிணத்தைப் பிடித்துவிட்டன.இரண்டு நாய்களும் உடலை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்க அது அங்குமிங்கும் நீரில் அலைந்தது.நாய்களின் மூச்சிறைப்பு கூட கேட்டது.என் புலன்கள் மிகக் கூர்மையாகிவிட்டதை உணர்ந்தேன்.கரைகளில் இருந்த மரங்களில் பறவைகள் அடையும் இரைச்சல் ஒரு ஆர்கெஸ்ட்ரா போல  விட்டுவிட்டு நதியின் மீது வந்து சேர்ந்தது.கங்கை ஸ்ஸ்ஸ் என்று சத்தமிட்டுக்கொண்டே போய்க் கொண்டிருந்தது.பரிசல்காரன் மாறி மாறி துடுப்பு போடும் ஒலி.கொழுத்த மீன்கள் அங்குமிங்கும் கங்கையைத் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தன.

இது போல் மிகச் சில தருணங்களில்தான் உணர்ந்திருக்கிறேன்.ஆபத்துக் காலங்களிலும் அதீத காமத்தின் சில கணங்களிலும். சில புத்தகங்களில் தடுக்கிய ஏதோ ஒரு வரியிலும்...ஒருதடவை அகமதாபாத்தில் ஒரு பனியாப் பெண் தன் கீழாடையைக் கழற்றியவுடன் இதே போல் ஒரு அமைதிக்குப் போய்விட்டேன்.அவளது யோனி அத்தனை நேர்த்தியாய் இருந்தது.ஒரு ஓவியனின் கனவு யோனி அது.உலகப் புகழ்   பெறவேண்டிய யோனி.எல்லா ஆர்ட் காலரிகளிலும் படமாய் இருக்கவேண்டிய யோனி.நம்முடைய இலக்கியங்களில் புகழப்படும் அரவப் பட அல்குல்..!ஒரு விலை மதிப்பற்ற கலைப்பொருளை தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டிருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை.
''என்ன அப்படி பார்க்கிறாய்''என்றாள்.
நான் ''உன் யோனி அற்புதமாக இருக்கிறது!''
'க்யா''என்றாள்.கொஞ்சம் கிராக்கு என்று என்னை நினைத்திருக்க வேண்டும்.அவளைத் தொடவே எனக்கு அச்சமாய் இருந்தது.அதைத் தொட..தொட்டால் உடைந்துவிடும் ஒரு கலைப் பொருளை தூரத்தில் இருந்தே பார்க்கவிரும்பும் ஒரு கலாரசிகன் போல..நான் மறுபடியும் ''இட் இஸ் ப்யூடிபுல்'' என்றேன்.
''அரே இதைத்தான் கடைசி வரை சொல்லிக் கொண்டிருக்கப் போறியா''என்றாள் .பிறகு சற்று சந்தேகத்துடன்''நீ நபும்சகனா?''
 உண்மையில் அவள் அத்தனை அழகி அல்ல.ஆனால் அவள் அல்குல்!அதேசமயம் எதிர்விதமாயும் நிகழ்ந்தது உண்டு.மிகுந்த முக வசீகரமான பெண்களின் யோனிகள் மாமிசத்துண்டுகள் போல இருப்பதை கண்டிருக்கிறேன்.விதவிதமான யோனிகள் பற்றி யாரும் ஒப்பியல் ஆய்வு  செய்து இருக்கிறார்களா  தெரியவில்லை.நமக்கு எல்லாமே பாம்பு படம் எடுத்தார் போல என்று தான் உவமிக்க தெரியும்.உண்மையில் சில யோனிகள் செம்பருத்திப் பூ போல இருக்கும்.சில தாமரை இல்லை போல..சில பன்றியின் உதடுகள் போல .

அதே போல் ஒரு தடவை அஸ்ஸாமில் மரணத்தை மிக அருகில் பார்த்தவேளையில் உணர்ந்தேன்..பாம்பேயில் நான் வேலை பார்த்த கடத்தல்கார சேட்டுக்குகவுஹாத்தி மூலம் தான் சரக்கு வந்து கொண்டிருந்தது.ஹெராயின்.அப்போதெல்லாம் இந்தியாவில் ஹெராயின் பற்றி அதிகம் தெரியவில்லை.பர்மாவிலிருந்து கவ்ஹாத்தி கல்கத்தா பாம்பே வந்து படகு மூலமாய் பாகிஸ்தான் மூலம் யூரோப் முழுக்க ஊடுருவி தென் அமெரிக்க நாடுகளில் காத்திருக்கும் சிசிலியன்கள்[யார் எனத் தெரியாவிடில் காட்பாதர் படம் பார்க்கவும்]கிட்டே சேர்ந்து யு எஸ்ஸில் ஹிப்பிகளிடம் போய் அவர்கள் மகேஷ் யோகியை பார்க்க இமயமலை  வருகையில் திரும்ப இந்தியா வந்துவிடும்.ஒரு சுற்று.

இந்த ரிலே ரேசில் கவ்ஹாத்தியில் இருந்து பாம்பே கொண்டுவரும் சங்கிலியில் ஒரு கண்ணிதான் நான்.இன்றைய அளவு ரிஸ்க் இல்லை எனினும் ஆபத்தான வேலையே.இந்தியாவில் அப்போதுதான் ஹிப்பிக்களின் ஊடுருவல் தொடக்கி இருந்தது.பூக்களின் குழந்தைகள் என்று அழைக்கப் பட்ட இவர்கள்தான் கஞ்சா சரஸ் என்று நாட்டுச் சரக்கு மட்டும் அடித்துக் கொண்டிருந்த இந்தியருக்கு ஹெராயின் போன்ற சொர்க்கத்துக்கு அதிவிரைவு வண்டிகளை அறிமுகப் படுத்தியவர்கள்.எல் எஸ் டி சற்று பின்னால் வந்தது.அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of perception படித்துவிட்டு நான் போன எல் எஸ் டி பயணம் பற்றி பின்னால் எழுதுகிறேன்.மறந்தால் நினைவு படுத்துங்கள்.ஏன் எனில் நான் எந்த சத்தியங்களையும் காப்பாற்றுவதில்லை என்று தோழி சொல்கிறாள்.''அதை ஒரு கொள்கையாவே வைச்சிருக்கே நீ ஏன்  அரசியல்லே நுழையக் கூடாது?''

போதைப் பொருட்களின் முக்கோணம் எனப்படும் பர்மா தாய்லாந்து வியட்நாமின் கோணத்தில் ஒரு புள்ளியாய் கவ்ஹாத்தியில் 'முக்தி'க்காக காத்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது.[முக்திதான் பாஸ்வோர்ட்!]
 தென்னிந்தியர்கள் பலருக்கு நமது பாரத வர்ஷத்தின் வட கிழக்கு மாநிலங்களைப் பற்றி ஆன்னா ஆவன்னா கூட தெரியாது.துக்கடா மாநிலங்கள் என்பதாலோ என்னவோ நமது பைஜாமா குர்த்தாக்கள் அவற்றை அதிகம் கண்டுகொள்ளாததால் வந்த வினை தான் இன்றைய போடோ உல்பா நாக தீவிரவாத குழுக்கள்.சீன இந்திய கலப்படப் பணியாரம் போல் இருக்கும் அம் மக்களின் சுய அடையாள உரசல்கள் அப்போதே ஆரம்பித்திருந்தன.

அந்த தடவை சரக்கு கம்போடியாவில் இருந்து வரவேண்டும்.வரவில்லை.உள்நாட்டில் ஒரே வெட்டு குத்து எனறார்கள்.தாமதம் ஆகும் .ஆனால் வந்துவிடும் என செய்தி வந்தது.இன்று போல் இல்லை.டெலிபோன் என்பது போஸ்ட் ஆபிசிலும் பிரதம மந்திரி வீட்டிலும் மட்டும்தான் இருக்கும்.நான் சேட்டுக்கு போன் பண்ணி பதில் பெறவே ஒரு வாரம் ஆனது.ட்ரங்கால் பதிவு செய்து ஒரு வாழ்க்கை காத்திருந்தால் சில சமயம் கிடைக்கும்.சாவகாசமாய் பேர் தங்கியிருந்த விடுதி விலாசம் எல்லாம் வாங்கிக் கொண்டு அடுத்தவாரம் வா எனறார்கள்.

காத்திருந்தேன்.ஆனால் பொழுது போவது சிரமமாக இருந்தது.மான்சூன் அந்த வருடம் உக்கிரமாக இருந்தது.மழை கொட்டு கொட்டென்று கொட்டி தங்கியிருந்த விடுதியின் கீழ் தளத்தில் முழங்கால் அளவு தண்ணீர்.சிலசமயம் மீன்கள் கூட பிடிபட்டன.விடுதி வெள்ளைக்காரன் கட்டியது.முடிந்தவரை மரத்தால் ஆனது.சிமிண்டை  விட மரம் அங்கெல்லாம் மலிவு.காடுகள் எதற்கு இருக்கின்றன.மூன்றாவது தளத்தில் யாராவது தும்மினால் கூட முழு விடுதியும் பிள்ளைத்தாச்சிப் பெண் போல நீளமாக அழுதது.
இரவெல்லாம் தூங்கவே முடியவில்லை.தலைக்குள் எப்போதும் மழை கொட்டும் ஒலி.பத்திரிகைகள் புத்தகங்கள் எதுவும் கையில் இல்லை.பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.சாப்பாட்டுக்கு ஒவ்வொரு முறையும் அடுத்த தெருவில் இருந்த ஹோட்டலுக்கு நீந்தித்தான் செல்ல வேண்டியிருந்தது.எல்லாமுறையும் முழங்கால்களில் ஒட்டிக் கொண்ட அட்டைகளைப் பிய்த்து எறிவது பெரிய வேலையாக இருந்தது
.
கொசுக்கள் வேறு.மான்சூன் சீசனில் அஸ்ஸாமியக் காடுகளில் இருந்து படையெடுத்து வரும் கொசுக்களை அன்னியர் கண்டால் மாரடைப்பு வந்துவிடும்.[வியட்நாமில் அமெரிக்கர்களைத் தோற்கடித்ததில் பெரும்பங்கு கொசுக்களுக்கு உண்டு]மாரடைப்பு வந்தாலும் பரவாய் இல்லை.மலேரியா வரக் கூடாது.அதுவும் cerebral malaria வந்துவிட்டால் நேரே பரம பிதாவின் காலடிதான்.சாவு பரவாய் இல்லை என்று தோன்றிவிடும்.Painful and lingering death.
அப்போது  டார்ட்டாய்ஸ் எல்லாம் கிடைக்காது.நாட்டுப் புகையிலையை உதிர்த்து உடல் எல்லாம் தடவிக் கொண்டால் கொசு கிட்டே வராது.நெடியில் தூக்கமும் வராது.சில மூலிகைகளை எரித்து புகை மூட்டம் போடுவார்கள்.மலேரியா வராது ஆனால் ஆஸ்த்மா வரலாம்.ரொம்ப சக்தி வாய்ந்த மருந்து 'மருந்து'தான்.யெஸ்.நாட்டுச் சாராயம் ஒரு புட்டி சாயங்காலங்களில் இறக்கிவிட்டீர்கள் என்றால் காண்டாமிருகம் கடித்தால் கூட உங்களுக்குத் தெரியாது.

வாட்ச்மேனிடம் விசாரித்தேன்.சாரயத்தைவிட கஞ்சா எளிதில் கிடைக்கும் என்றான்.கஞ்சா குண்டலினியை எழுப்பி விடும் .ஆனால் ஆண்குறியைத் தூங்கப் பண்ணிவிடும் என்று எங்கோ கேட்டிருந்தேன்.எனக்கு அவசரமாய் குண்டலினியை எழுப்பும் அவசியம் எல்லாம் இல்லை.எங்காவது புணரப் போனால் குறி எழுந்தால் போதும்.அதுகூட சில காலம் பிசகி நபும்சகனாகத் திரிந்தேன்.
''சாராயம் என்றால் பத்து ரூபாய் சாப்''
அந்தக் காலத்தில் அந்தப் பிராந்தியத்தில் அது பெரிய தொகை.தயங்கினேன்''சரி.கொண்டு வா''
''ஒரு போத்தல் போதுமா சாப்?''
''இரண்டு''
அரைமணி கழித்து இரண்டு மண் எண்ணெய் பாட்டில் நிறைய லோக்கல் சரக்கும் பொறித்த மீன் துண்டங்களும் கொண்டுவந்தான்.
''மீனுக்கு காசு வேணாம் சாப்.நம் மனைவி சுட்டது''சாராயம் கூட அவள் வடித்ததாகவே இருக்கலாம்என தோன்றியது.
மூடியைத் திறந்ததும் குபீர் என்று  ஆவி அடித்தது.ஒரு மிடறு குடித்ததும் தொண்டை எரிந்தது.கண் போய் விடுமோ என்று பயம் வந்தது.மிகக் காட்டமான சரக்கு.அரைமணியில் நல்ல போதை வந்துவிட்டது.வாட்ச்மேனிடம் அவன் மனைவியின் கற்பைச் சந்தேகப் பட ஆரம்பித்திருந்தேன்.
அவன்''படுத்துக்கோ  சாப்.சற்று அதிகமாகிவிட்டது சாப்''
''யாருக்கடா அதிகம்.வேசி மகனே.பத்து ரூபாயாடா இந்த நாற்றச் சரக்கிற்கு.மிச்ச காசுக்கு உன் பொண்டாட்டியைக்  கூட்டிவாடா''
அவன் பேசாமல் எழுந்து கதவை மூடிக்கொண்டு ''குட் நைட் சாப்''என்று போன பிறகும் கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தேன்.

எப்போது தூங்கினேன்.தெரியவில்லை.விழித்தபோது அடிவயிறு கனத்தது.பாத்ரூம் போக எழுந்தேன்.கக்கூஸ் வராண்டாவின் கடைசியில் பொதுவானது.இருபது அடியாவது நடக்க வேண்டும்.போய் விடுவேனா என்று சந்தேகம் வந்தது.தலை அப்படி கனத்தது.ஏன் வாழ்வில் அப்படி குடித்ததே இல்லை.தள்ளாடி கதவுடன் போராடி திறந்து வெளியே வந்தேன்.வெளியே மழை ஹோ வென்று இரைச்சலுடன் முகத்தில் அறைந்தது.மரத்தளம் முழுக்க ஈரம்.மணி தெரியவில்லை.சாயங்காலமாய் இருக்கலாம்.இருட்டு மழையினூடே தார் போல பரவிக் கொண்டு இருந்தது.பக்கத்து அறைகளில் அரவமே இல்லை.உலகம் அழிந்துவிட்டதா என்ன..சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க முயல்கையில் தான் அவனைப் பார்த்தேன்.

ஒரு அஸ்ஸாமியன்.கழிவறை அருகே புகைத்துக் கொண்டு நின்றிருந்தான்.இருட்டில் தெரியாவிடினும் அவன் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் என உணர முடிந்தது.மெல்ல நகர்ந்து என் அருகில் வந்தான்.அவன் முகம் அத்தனை தெளிவாய்த் தெரியவில்லை.ஆனால் அவன் கண்களை மட்டும் என்னால் நன்கு பார்க்க முடிந்ததுஒரு மிருகத்தின் கண்கள்.நான் ''கோன்?''என்றேன் அதட்டலாக.ஏனோ பயமாய் உணர்ந்தேன்.அவன் பதில் சொல்லவில்லை.அப்போதுதான் அவன் கையில் இருந்த பெரிய கத்தியைப் பார்த்தேன் .கூர்க்காக்கள் வைத்திருக்கும் குக்ரி என்ற வளைந்த கத்தி.
சட்டென்று அந்த கை நீண்டது.என் இடது விலாவில் பெரிய வலிப் பந்து வெடித்தது.

அடுத்த கணங்கள் தெளிவற்றவை.நான் கீழே விழுந்து கொண்டே இருந்தேன்.முடிவிலாத ஒரு பள்ளத்துக்குள் கால்களே  இல்லாதவன் போல..அவன் என்னைக் குத்திக் கொண்டே இருந்தான்.அவன் கண்களின் பிரகாசம் கூடிக்கொண்டே போனது.மழை பெய்துகொண்டே இருந்தது....

1 comment:

  1. நானும் நிறைய படித்திருக்கிறேன்... கொஞ்சம் அசத்தி விட்டீர்கள். யோனி சமாசாரம்.. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேரிட்டது. உலகப்புகழ் பெற வேண்டிய யோனியா? ஒரு படம் எடுத்துப் போட்டிருந்தால் தெரிந்து கொண்டிருப்போமே? யோனியைப் பார்த்தவுடன் செயலில் இறங்கியே பழகி விட்டது. அடுத்த முறை அழகு பார்க்க வேண்டும்... :-)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails