Tuesday, July 6, 2010

கேப்சூல் கவிதைகள் 2

1.மாற்றித் தர
மறுத்து விட்டார்கள்
வாங்கும்போதே
ஓரத்தில்
உடைந்திருந்தது நிலா.

2.எங்கிருந்தோ வந்து
என் வீட்டில்
இறந்துபோன
வெட்டுக் கிளியை
எரிக்கவேண்டுமா
புதைக்க வேண்டுமா

3.என் வீட்டில்
ஒரு நாய் இருந்தது.
எல்லாரையும் கடித்தது.
பிடித்து
கொட்டடியில் விட்டோம்.
எங்கள்  ஊரில்
ஒரு ரவுடி இருந்தான்.
எல்லாரையும் அடித்தான்
சட்டசபையில்
விட்டுவிட்டோம்

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails