Sunday, June 20, 2010

எல்.எஸ்.டி!

எழுதப் போகிற
கடிதத்துக்கு
வார்த்தைகள் உதிரும்
காற்றிலிருந்து
வேப்ப மரங்கள்
எட்டிப் பார்க்கும்
ஹிருதய ரகசியங்களை
பிசாசு ஜொலிப்போடு
நிலவு நகரும்
தியானத்தில்
இருட்டு கொப்பளிக்கும்
கனவில் எச்சில் மிதக்கும்
ஆற்றங்கரையோரம்
உயிர் வழிந்து உறைந்திருக்கும்
விட்டம் நோக்கி எய்த
பெருமூச்சு
தலைமேல் இன்னும் சுற்றும்
கதேயின் சாத்தான்
கடவுளை விடவும்
உன்னதக் கவிதை சொல்வான்
காதோரம் சொன்னான்
'கடவுள்
சிலுவையில் அறையப் படவே
தகுதியானவர்'
காலடியில்
புழுதி உயர்ந்து
முகத்தை மூடும்
கோடைவெயில்
எழுத்தின்  கழுத்தை நெறிக்கும்
வராத கடிதங்கள்
எண்ணிக்கை லட்சமாகும்
எழுதாத கவிதைகள்
கைவிரலில் சுடும்
பகல் இரவு
விழிப்பு உறக்கம்
எல்லாம் மாறும்
கணப்  பொழுதில்
L.S.D!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails