Saturday, June 26, 2010

இன்னும் முடியவில்லை

இழந்ததும் இருப்பதும் தாண்டி
கையில் இருக்கும்
வாழ்க்கையில்
ஏதோ வசீகரம்
இருக்கத்தான் செய்கிறது
இல்லாவிடில்
இன்னமும்
கவிதை நிகழாது என்னுள்

பெண்கள் வராத கனவுகளை
இப்போதுதான்
காண ஆரம்பித்திருக்கிறேன்

வெற்றிக்காக
பிரார்த்தனைகளை
நிறுத்திவிட்டேன்
தோல்விகளுக்காக
அவர் மீது
பழி போடுவதையும் ..

இன்று
என்னுடைய
லட்சியமும் ஆதர்சமும்
நானே
நான் எவ்வளவு
முயன்றாலும்
பிறராக ஆகமுடியாது
என உணர்கிறேன்
என்னிடமிருந்து நான்
என்றைக்குமே
தப்பிக்க முடியாது
என புரிகிறது

இருந்தாலும்
நான் இன்னமும்
எப்படி கவிதை எழுதுகிறேன்
என்றுதான் வியக்கிறேன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails